search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிண்டியில் குப்பை லாரி மோதி வாலிபர் பலி
    X

    கிண்டியில் குப்பை லாரி மோதி வாலிபர் பலி

    கிண்டியில் மோட்டார் சைக்கிள் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி பலியானார்.

    ஆலந்தூர்:

    மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது28). இவர் வடபழனியில் தங்கி மணலியில் உள்ள ரசாயன கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேளச்சேரியில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஹெல்மெட்டுடன் தலைநசுங்கி சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சங்கரை கைது செய்தனர்.

    Next Story
    ×