என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 4 பேர் அ.தி.மு.க.வில் சேர என்னிடம் தூதுவிட்டனர் - ஓ.பன்னீர்செல்வம்
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற இடைத்தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறும். இதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரை தொகுதி பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோம்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 4 பேர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர என்னிடம் தூதுவிட்டனர். செந்தில் பாலாஜியும் தி.மு.கவில் இணைவதற்கு முன்பு என்னிடம் தூதுவிட்டார். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றிபெறும் முறையில் தொண்டர்கள், நிர்வாகிகள் பணியாற்றவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #ADMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்