search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

    எருமப்பட்டி அருகே டிப்ளமோ என்ஜினீயர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி கெஜக்கோம்பையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் முசிறி அருகே உள்ள முத்துடையார்பாளையத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மகன் முரளிதரன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். ஆனால் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததால், இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் முரளிதரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×