என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்19 Dec 2018 5:59 PM GMT (Updated: 19 Dec 2018 5:59 PM GMT)
எருமப்பட்டி அருகே டிப்ளமோ என்ஜினீயர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி கெஜக்கோம்பையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் முசிறி அருகே உள்ள முத்துடையார்பாளையத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மகன் முரளிதரன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். ஆனால் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததால், இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் முரளிதரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி கெஜக்கோம்பையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் முசிறி அருகே உள்ள முத்துடையார்பாளையத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மகன் முரளிதரன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். ஆனால் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததால், இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் முரளிதரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X