என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாண்டிக்குடியில் கார் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள வாழைகிரி என்ற பகுதியில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தபகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த உதயநிதி என்ற மதி (வயது 27) என்பதும் அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காருடன் உதயநிதி பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதான உதயநிதி மீது பட்டுக்கோட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்