என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் மது, புகையிலை பண்டல்கள் பறிமுதல் - 2 பேர் கைது
Byமாலை மலர்18 Dec 2018 10:16 AM GMT (Updated: 18 Dec 2018 10:16 AM GMT)
ராஜபாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின் றனர். அதன்படி சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தேவதானம் குமரன்கோவில் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக கோவி லூரைச் சேர்ந்த பெரிய சாமி (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜபாளையம் முடங்கி யார் ரோடு முப்பிடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகை யிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது சமுத்திரக்கனி (53) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 50 புகையிலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சமுத்திரக்கனியை கைது செய்தனர். # tamilnews
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின் றனர். அதன்படி சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தேவதானம் குமரன்கோவில் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக கோவி லூரைச் சேர்ந்த பெரிய சாமி (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜபாளையம் முடங்கி யார் ரோடு முப்பிடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகை யிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது சமுத்திரக்கனி (53) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 50 புகையிலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சமுத்திரக்கனியை கைது செய்தனர். # tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X