என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
தேனி:
தேனி அருகே மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் விவசாய தேவைக்காக மண்எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனை பயன்படுத்தி சிலர் அனுமதியின்றி வேறு தேவைகளுக்கு மண் கடத்தி வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் காளவாசல் உள்ளிட்டவைகளுக்கு மர்மகும்பல் மண் கடத்தி வருகிறது. போலீசார் இவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் கடத்தலை தடுக்கமுடியவில்லை.
சப்-இன்ஸபெக்டர் பவுன்ராஜ் தலைமையில் கோம்பை போலீசார் கருவேலம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மேற்குபகுதியில் உள்ள ஓடையில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது ஓடையில் மணல் திருடியது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் தீபன்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்