என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எடப்பாடி அருகே விபத்து - டிரைவர் பலி
எடப்பாடி:
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பி.மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டுசாமி. இவரது மகன் சந்தானபாரதி (வயது 28). வேன் டிரைவர். திருமணம் ஆகவில்லை.
இவர் கறிக்கடைகளுக்கு கோழிகள் சப்ளை செய்யும் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை சந்தானபாரதி வேன் மூலம் எடப்பாடி பகுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்த பின்னர், மீதமுள்ள கோழிகளுடன் சங்ககிரி நோக்கி வேனை ஓட்டிச் சென்றார்.
எடப்பாடி- சங்ககிரி சாலையில் உள்ள கோனமோரி மேடு பகுதியில் காலேஜ் இறக்கம் பகுதியில் வேன் சென்றபோது, எதிர்திசையில் சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி வந்த சுற்றுலா பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த சந்தானபாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா பஸ்சில் வந்த பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வேன் டிரைவர் சந்தானபாரதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்