search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்டத்தில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
    X

    விருதுநகர் மாவட்டத்தில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வீரசோழனில் பணியாற்றிய திருக்கண்ணன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்திற்கும், வன்னியம்பட்டியில் பணியாற்றிய கார்த்திகேயன் வீரசோழனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    நத்தம்பட்டியில் பணியாற்றிய சந்தோஷ் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சுழி சப்-இன்ஸ்பெக்டர் அசோக், விருதுநகர் மேற்கு நிலையத்திற்கும், வெம்பக்கோட்டை அந்தோணி செல்வராஜ் சூலக்கரைக்கும், ராஜபாளையம் வடக்கு நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சீனிராஜ் வெம்பக்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ராஜபாளையம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் அம்மாபட்டிக்கும், அருப்புக்கோட்டை டவுன் செந்தில்வேலன், கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் பஜார் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வித்யாலட்சுமி சைபர் கிரைம் பிரிவுக்கும், நெடுஞ்சாலை ரோந்துப்பணி சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் மனித உரிமை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×