search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஹெல்மெட்’ அணிந்து சிலிண்டர் திருடும் வாலிபர்- கண்காணிப்பு காமிராவில் பதிவு
    X

    ‘ஹெல்மெட்’ அணிந்து சிலிண்டர் திருடும் வாலிபர்- கண்காணிப்பு காமிராவில் பதிவு

    ஆதம்பாக்கம் பகுதியில் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்து வரும் வாலிபர் சிலிண்டர்களை திருடிச் செல்லும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பகுதியில் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்து வரும் வாலிபர் சிலிண்டர்களை திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அடுத்தடுத்து 2 வீடுகளில் சிலிண்டர் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம் பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் தங்க நகை மதிப்பீட்டாளர். திறந்து கிடந்த இவரது வீட்டுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் திடீரென புகுந்து சிலிண்டரை திருடி சென்று விட்டான்.

    இதே போல் ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சத்தியவாசன் என்பவரது வீட்டுக்குள்ளும் புகுந்த ‘ஹெல்மெட்’ வாலிபர் சிலிண்டரை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.

    இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது ‘ஹெல்மெட்’ அணிந்தபடி வரும் வாலிபர் சிலிண்டரை தூக்கிச் செல்வது பதிவாகி உள்ளது. அவனது முகம் சரியாக தெரியவில்லை. அவனை பிடிக்க விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×