search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி
    X

    ஆத்தூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி

    ஆத்தூர் அருகே இன்று பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையம், தேவேந்திரநாடு பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகள் நாகவள்ளி (வயது 21). மாற்றுத்திறனாளி. இவர் வட சென்னிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் இல்லாததால் அக்கா வீட்டில் இருந்து கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவார்.

    இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அவர் பஸ்சில் ஏறுவதற்காக முன் பக்கமாக வந்தார். இவர் வருவதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை எடுத்தார். அப்போது பஸ் நாகவள்ளி மீது மோதியது. இதில் அவர் நிலைத்தடுமாறி பஸ் சக்கரத்தில் விழுந்தார். பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த சக மாணவிகள் நாகவள்ளி உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×