என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி
Byமாலை மலர்11 Dec 2018 10:28 AM GMT (Updated: 11 Dec 2018 10:28 AM GMT)
ஆத்தூர் அருகே இன்று பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆத்தூர்:
இது குறித்து தகவல் அறிந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையம், தேவேந்திரநாடு பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகள் நாகவள்ளி (வயது 21). மாற்றுத்திறனாளி. இவர் வட சென்னிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் இல்லாததால் அக்கா வீட்டில் இருந்து கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவார்.
இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அவர் பஸ்சில் ஏறுவதற்காக முன் பக்கமாக வந்தார். இவர் வருவதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை எடுத்தார். அப்போது பஸ் நாகவள்ளி மீது மோதியது. இதில் அவர் நிலைத்தடுமாறி பஸ் சக்கரத்தில் விழுந்தார். பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த சக மாணவிகள் நாகவள்ளி உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X