search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலி
    X

    அன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

    அன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ. மேட்டுப்பாளையம் அய்யப்ப ரெட்டி புதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு பிரனேஷ் (4), விகாஷ் (1½) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

    ரமேசும், அவரது மனைவி ராதாமணியும் கஞ்சப்பள்ளியில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். நேற்று அவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். மாலை குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் விகாஷ் அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தான்.

    இதில் மூச்சு திணறி இறந்தான். ரமேசும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது மூத்த மகன் பிரனேஷ் மட்டும் தான் வீட்டில் இருந்தான். விகாசை தேடிய போது குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கதறி அழுதனர்.இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×