என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்காசி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
நெல்லை:
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சங்கரம்மாள் (வயது33). நேற்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கோட்டைச் சுவற்றை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர், சங்கரம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை இழுத்து அறுத்தார்.
அப்போது சங்கரம்மாள் விழித்து கொண்டதால் செயினை பிடித்து கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனாலும் கொள்ளையன் செயினின் ஒரு பகுதியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதில் 23 கிராம் எடையுள்ள பகுதி கொள்ளையனின் கையில் சிக்கி விட்டது. மீதமுள்ள 9 கிராம் எடையுள்ள செயின் சங்கரம்மாள் கையில் இருந்தது.
உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளையனை விரட்டி சென்று தேடினார்கள். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சங்கரம்மாள் ஆய்க்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்