search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க.வினர் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க.வினர் ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க.வினர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் 4-வது கலந்தாய்வு கூட்டம் கரூரில் நடந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். 

    பாராளுமன்ற அமைப்பாளர் சிவசாமி, மாவட்ட பா.ஜ.க. தலைவர் முருகானந்தம், இளைஞரணி மாநில பொறுப்பாளர் கோபிநாத், கோட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் நகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இதில் பூத் கமிட்டி அமைப்பது,  ஒவ்வொரு கேந்திர பொறுப்பாளர்களையும் நேரில் சென்று சந்திக்கும் தாமரை சக்தி யாத்திரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மோகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×