search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை விரட்டியதில் விவசாயி படுகாயம்
    X

    தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை விரட்டியதில் விவசாயி படுகாயம்

    தேன்கனிக்கோட்டை அருகே விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை ஒற்றை யானை விரட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புக்காட்டில் ஏராளமான யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று 75-க்கும் மேற்பட்ட யானைகளை விரட்டும்போது அந்த யானை கூட்டத்தில் இருந்து ஒற்றை யானை பிரிந்து வந்தது. 

    அந்த யானை நொகனூர் அருகே விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த நொகனூர் கிராமத்தை சேர்ந்த பைரப்பா (வயது55) என்ற விவசாயியை துரத்தியது. யானையிடம் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடினார். அப்போது கீழே விழுந்து தலை, கை கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அதனால் அந்த யானை அவரை தாக்காமல் திரும்பி சென்று விட்டது. 

    காயம் அடைந்த விவசாயி பைரப்பா தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம், வனக்காப்பாளர்கள் ஆறுமுகம், ஆனுசாமி ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்தனர். 

    Next Story
    ×