search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் அவதூறு - நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்
    X

    சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் அவதூறு - நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்

    சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் தி.நகர் ஹரிநாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மண் பாண்ட சங்க தலைவர் சே.ம. நாராயணன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் பேசிய தலைவர்கள் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய அவதூறு செய்திகளை முழுமையாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    உண்ணாவிரதத்தில் த.மா.கா. பொருளாளர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, கொட்டிவாக்கம் முருகன், மனோகரன், சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங் நாடார், அம்பத்தூர் விஜயகுமார், புழல் தர்மராஜ், கே.சி.ராஜா, ராகம் சவுந்தரபாண்டியன், மயூரா, டாக்டர் ஜெமிலா, சிலம்பு சுரேஷ், சாத்தான் குளம் முன்னாள் சேர்மன் ஆனந்தராஜ், சத்ரிய பெருமாள், மால் மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சி.பி.எஸ்.சி. பாடத்தில் நாடார் பற்றிய பொய் செய்திகளை வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசு நீக்க வேண்டும்.

    ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, இதழியல் துறையில் பல சாதனைகள் படைத்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சேவையை போற்றும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு குலசை எக்ஸ்பிரஸ் எனும் புதிய ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாது மணல் தொழிற் சாலைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×