என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 4-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை
Byமாலை மலர்2 Dec 2018 9:44 AM GMT (Updated: 2 Dec 2018 9:44 AM GMT)
தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNRains #IMD
சென்னை:
அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை நோக்கி வீசும் காற்று காரணமாக தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் காரணமாக 4-ந்தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், 5-ந்தேதி வட தமிழகத்திலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் லேசாக மழை பெய்யும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMD
அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை நோக்கி வீசும் காற்று காரணமாக தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இன்றும், நாளையும் லேசாக மழை பெய்யும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMD
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X