என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air pressure"

    தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNRains #IMD
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை நோக்கி வீசும் காற்று காரணமாக தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


    தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் காரணமாக 4-ந்தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், 5-ந்தேதி வட தமிழகத்திலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் லேசாக மழை பெய்யும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMD
    பொங்கலுக்குள் தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். #Rain #PrivateWeather
    சென்னை:

    வானிலை நிலவரம் குறித்து டெல்லி, சென்னையில் உள்ள மத்திய அரசின் வானிலை ஆய்வு மையங்கள் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றன.

    இதுபோல் தனியார் வானிலை ஆய்வாளர்கள் பலரும் வானிலையை கணித்து தகவல் வெளியிட்டு வருகிறார்கள்.

    இன்று தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் கூறியதாவது:-

    வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை நேற்று சீர்காழி அருகே கரையை கடந்து தற்போது தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    அது தற்போது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. நாளை (25-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவும்.

    எனவே புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் மறு குடியமர்த்தப்பணி, மீட்பு பணி, நிவாரணப் பணி செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.

    29, 30, டிசம்பர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்த பட்சம் 24 மணி நேரமாவது விட்டு விட்டு மழை பெய்யும்.

    வடகிழக்கு பருவமழை இயல்பை விட நிச்சயமாக அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை வரை வட கிழக்கு பருவமழை பெய்ய சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.



    வருகிற 29-ந்தேதிக்கு அடுத்தபடியாக டிசம்பர் 5-ந்தேதி ஒரு தாழ்வு நிலையும், டிசம்பர் 12-ந்தேதி ஒரு தாழ்வு நிலை, டிசம்பர் 18, 20-ந்தேதிகளில் ஒரு தாழ்வு நிலை, 25-ந்தேதி ஒரு தாழ்வு நிலை, 29, 30, 31, ஜனவரி 1-ந்தேதிகளில் ஒரு தாழ்வு நிலை, ஜனவரி 8-ந்தேதி ஒரு தாழ்வு நிலை என ஏழு, ஏட்டு தாழ்வு நிலைகள் உருவாக இருக்கின்றன.

    அவற்றில் இரண்டு புயல்களாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஒன்று தென் தமிழகத்துக்கும், மற்றொன்று வட தமிழகத்துக்கும் வர வாய்ப்பு இருக்கிறது.

    டிசம்பர் மாதம் 10-ந் தேதிக்கு மேல் பருவமழையின் இறுதி கட்டத்தில் தீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தின் ஒட்டு மொத்த மாவட்டங்களில் சராசரி மழையை வட தமிழகமும், சராசரியை விட கூடுதலான மழையை டெல்டாவும், 30 சதவீதத்துக்குமேல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் கூடுதலான மழையை பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    மழை தாமதம் அடைந்தாலும் பெய்ய வேண்டிய மழை டிசம்பர் இறுதிக்குள் பெய்யும். இன்னும் ஜனவரி மாதம் முதல் 15 தேதிக்குள்ளும் நல்ல மழை இருக்கிறது. ஜனவரி முதல் வாரத்தில் நிறைய மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rain #PrivateWeather
    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் காரணமாக காற்றின் போக்கு திசை மாறியதாலும், ஈரப்பதம் குறைந்ததாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    நவம்பர் 1-ந்தேதி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    அதற்கேற்ப கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவுகிறது.

    இதேபோல் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையிலும் 3 நாட்களாக மழை நீடிக்கிறது.

    இதையடுத்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.



    அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களிலும் பருவ மழை பெய்யும். தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் பரவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது.

    இதற்கிடையே இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரம் அடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தீபாவளியன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங் களில் மழை பெய்யும்.

    இலங்கைக்கு கிழக்கே தற்போது குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரும் 6-ந்தேதி தீபாவளி பண்டிகையன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  #NortheastMonsoon  #Rain
    ×