search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி
    X

    பெரம்பலூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் தனது மனைவியுடன் பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் வீடு திரும்பினார். பெரம்பலூர் அடுத்த ஆத்தூர் பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் கைகளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று பொன்னுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவியும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

    இது குறித்து வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் பூலாம்பட்டியை சேர்ந்த  மூர்த்தியை கைது செய்தனர். 
    Next Story
    ×