search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக போராட்டத்தை தூண்டுகிறது - பிரேமலதா
    X

    திமுக போராட்டத்தை தூண்டுகிறது - பிரேமலதா

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க.தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #DMDK #PremalathaVijayakanth #DMK
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து தே.மு.தி.க. அறிவித்த ரூ.1 கோடி நிவாரண பொருட்களை வழங்கினோம். மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

    புயல் பாதித்த இடங்களில் ‘டாஸ்மாக்’ மதுக்கடை மூடப்பட்டுள்ளது. ஆனால் பின்புற கதவு வழியாக வியாபாரம் ஜோராக நடக்கிறது. மீனவர்களின் படகு சேதத்துக்கு அரசு ரூ.5 லட்சம் அறிவித்து உள்ளது. ஆனால் மீனவர்கள், படகை சரி செய்ய ரூ.25 லட்சம் கேட்கிறார்கள். இந்த தொகையை அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் அரசியல் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரம் உள்பட ‘கஜா’ புயல் வரையும் அரசியல் செய்கிறார்கள்.


    புயல் பாதித்த பகுதிகளில் தி.மு.க.தான் மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடுகிறது.

    ஜெயலலிதா கைதின் போது அப்பாவி 3 மாணவிகளை எரித்து கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ராஜீவ்காந்தி கொலையில் 25 வருடம் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்யலாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு தங்களது விருப்பப்படி மூடலாம், திறக்கலாம் என்று நினைக்க கூடாது. அப்படி மீண்டும் ஆலையை திறந்தால் அங்கு போராட்டம் வெடிக்கும்.

    தமிழகம் பாலைவனமாக மாறிவருகிறது. மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது. அங்கு தடுப்பு அணை கட்டுவதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது.

    மக்கள் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டால் முதலில் தே.மு.தி.க. பங்கேற்கும். தற்போது தி.மு.க. நடத்தும் அனைத்துகட்சி கூட்டத்தை ஒரு பொது இடத்தில் நடத்த வேண்டும். அறிவாலயத்தில் நடத்தக்கூடாது. அப்போது தான் அனைத்து கட்சியினரும் அதில் கலந்து கொள்ள முடியும்.

    தி.மு.க. தங்களை முன்னிறுத்துவதற்காக அவர்களுக்கு வேண்டிய இடங்களில் கூட்டத்தை நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #DMK
    Next Story
    ×