என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கூடலூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரும் ஆயிஷா (வயது 24) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் குழந்தை உள்ளது. ஆயிஷா கம்ப்யூட்டர் சென்டருக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஆயிஷா வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை காஜா மைதீன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைக் கண்ணன் (வயது 40). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு சம்பவத்தன்று பெங்களூரில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு எங்கு சென்றார்? என தெரியவில்லை.
இது குறித்து அவரது மனைவி தவசீலா உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்