search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
    X

    கூடலூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

    கூடலூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண் தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரும் ஆயிஷா (வயது 24) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் குழந்தை உள்ளது. ஆயிஷா கம்ப்யூட்டர் சென்டருக்கு வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஆயிஷா வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை காஜா மைதீன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைக் கண்ணன் (வயது 40). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு சம்பவத்தன்று பெங்களூரில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு எங்கு சென்றார்? என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி தவசீலா உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×