search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்பால பணி தாமதம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 தேமுதிக-வினர் கைது
    X

    மேம்பால பணி தாமதம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 தேமுதிக-வினர் கைது

    மேம்பால பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 தே.மு.தி.க. வினரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை நேரு நகர் முதல் எழில் நகர் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறி தே.மு.தி.க. சார்பில் இன்று கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினார்கள். தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களில் 200 பேரை கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #DMDK
    Next Story
    ×