search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர், தலைமை கொறடா வழங்கினர்
    X

    பெரம்பலூர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர், தலைமை கொறடா வழங்கினர்

    பெரம்பலூர் பயனாளிகளுக்கு கலெக்டர், தலைமை கொறடா நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் 65-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் தொடக்கமாக கூட்டுறவு கொடியினை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஏற்றி வைத்தார். திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான உமாமகேஸ்வரி கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் அதனை திரும்பக்கூறி உறுதிமொழியை எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர் சாந்தா பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், 2018-ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 2017-18-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பெரம்பலூர், வெண்பாவூர், அரும்பாவூர், கல்பாடி, புதுவேட்டக்குடி, புஜங்கராயநல்லூர், சிறுகுடல், சாத்தனுர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வாயிலாக விவசாய நகைக்கடன் மற்றும் பயிர்க் கடன் நேரடிக் கடன் மற்றும் 25 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×