search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூல் வாங்கி ரூ. 77 லட்சம் மோசடி- பனியன் நிறுவன அதிபர் கைது
    X

    நூல் வாங்கி ரூ. 77 லட்சம் மோசடி- பனியன் நிறுவன அதிபர் கைது

    திருப்பூரில் நூல் வாங்கி ரூ. 77 லட்சம் மோசடி செய்த பனியன் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்-தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 48). இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் பனியன் தயாரிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்லடம் ரோடு தட்டான்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு நூல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நூல்களை வாங்கியுள்ளார்.

    இதற்காக முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை மட்டுமே பாஸ்கரன் வழங்கியதாக தெரிகிறது. மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்துள்ளார். நூல் தயாரிப்பு நிறுவனத்தினர் பலமுறை பாஸ்கரனிடம் சென்று பணம் கேட்டும் அவர் எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நூல் தயாரிப்பு நிறுவன மேலாளரான கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன்மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், பாஸ்கரன் தங்கள் நிறுவனத்தில் நூல் வாங்கி சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார். மோசடி வழக்கு தொடர்பாக பாஸ்கரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×