என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » banian company chief arrest
நீங்கள் தேடியது "banian company chief Arrest"
திருப்பூரில் நூல் வாங்கி ரூ. 77 லட்சம் மோசடி செய்த பனியன் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர்-தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 48). இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் பனியன் தயாரிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்லடம் ரோடு தட்டான்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு நூல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நூல்களை வாங்கியுள்ளார்.
இதற்காக முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை மட்டுமே பாஸ்கரன் வழங்கியதாக தெரிகிறது. மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்துள்ளார். நூல் தயாரிப்பு நிறுவனத்தினர் பலமுறை பாஸ்கரனிடம் சென்று பணம் கேட்டும் அவர் எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நூல் தயாரிப்பு நிறுவன மேலாளரான கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன்மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், பாஸ்கரன் தங்கள் நிறுவனத்தில் நூல் வாங்கி சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார். மோசடி வழக்கு தொடர்பாக பாஸ்கரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருப்பூர்-தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 48). இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் பனியன் தயாரிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்லடம் ரோடு தட்டான்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு நூல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நூல்களை வாங்கியுள்ளார்.
இதற்காக முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை மட்டுமே பாஸ்கரன் வழங்கியதாக தெரிகிறது. மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்துள்ளார். நூல் தயாரிப்பு நிறுவனத்தினர் பலமுறை பாஸ்கரனிடம் சென்று பணம் கேட்டும் அவர் எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நூல் தயாரிப்பு நிறுவன மேலாளரான கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன்மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், பாஸ்கரன் தங்கள் நிறுவனத்தில் நூல் வாங்கி சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார். மோசடி வழக்கு தொடர்பாக பாஸ்கரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X