search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி
    X

    ராஜபாளையத்தில் வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி

    ராஜபாளையத்தில் வாய்க்காலில் மூழ்கி மனநலம் பாதித்த சிறுவன் பலியானான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மருது நகரைச் சேர்ந்தவர் பாலுச் சாமி. இவரது மகன் முனீசுவரன் (வயது 7). இவனுக்கு சிறிது மனநலம் பாதிப்பு இருந்தது.

    நேற்று முன்தினம் மதியம் செண்பகத்தோப்பு ரோட்டில் உள்ள அனைத் தலை பாலம் வாய்க்காலில் பாலுச்சாமி குளிக்கச் சென்றார். அவருடன் முனீசுவரனும் சென்றான்.

    அவனை குளிப்பாட்டி கரையில் நிற்கச் சொல்லி விட்டு பாலுச்சாமி குளிக்கச் சென்றார். அவர் கரைக்கு திரும்பியபோது முனீசுவரன் அங்கு இல்லை.

    வீட்டுக்குச் சென்று இருப்பான் என நினைத்து பாலுச்சாமி வீட்டுக்கு வந்தார். ஆனால் அங்கும் மகன் வரவில்லை என தெரியவந்ததும், அவனை பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அனைத்தலை பாலம் வாய்க்காலில் முனீசுவரன் உடல் மிதப்பது தெரிய வந்தது. அவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×