என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்டுத் தாருங்கள்- கலெக்டரிடம் பெண் கோரிக்கை
Byமாலை மலர்20 Nov 2018 4:07 PM GMT (Updated: 20 Nov 2018 4:07 PM GMT)
சவுதி அரேபியாவில் உள்ள கணவரை மீட்டுத்தர வேண்டி ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 40). இவரது மனைவி அனுசியா. தனது 2 மகள்களுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் ‘‘எனது கணவர் கடந்த பத்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஊருக்கு வந்து சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக அவரிடம் எந்த விதமான தொடர்பும் இல்லை.
அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கும் வேலை பார்க்கும் அல்தப்ரி கார் வாஷ் நிறுவனத்தின் உரிமையாளருக்கும் ஏதோ பிரச்சனை என போனில் கூறினார். அதன் பின்னர் இன்று வரை எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளது. நிறுவனத்தின் உரிமையாளருக்கும் போன் செய்தோம். தகவல்கள் ஏதும் சொல்லவில்லை. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். #tamilnews
ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 40). இவரது மனைவி அனுசியா. தனது 2 மகள்களுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் ‘‘எனது கணவர் கடந்த பத்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஊருக்கு வந்து சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக அவரிடம் எந்த விதமான தொடர்பும் இல்லை.
அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கும் வேலை பார்க்கும் அல்தப்ரி கார் வாஷ் நிறுவனத்தின் உரிமையாளருக்கும் ஏதோ பிரச்சனை என போனில் கூறினார். அதன் பின்னர் இன்று வரை எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளது. நிறுவனத்தின் உரிமையாளருக்கும் போன் செய்தோம். தகவல்கள் ஏதும் சொல்லவில்லை. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X