search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே கடைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்
    X

    ஈரோடு அருகே கடைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்

    ஈரோடு அருகே கடைக்கு சென்ற பிளஸ்-2 மாணவி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் வசிப்பவர் ஜீவராஜ், இவரது மகள் தமிழ் செல்வி(வயது 18).

    தமிழ்செல்வி ஈரோட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி மாணவி தமிழ் செல்வி கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிகொண்டு, வெளியே சென்றார், ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும், மாணவியை காணவில்லை.

    இது தொடர்பாக மாணவின் தந்தை ஜீவராஜ் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இது குறித்து விசாரனை நடத்தி மாணவியை தேடி வருகிறார்.

    மாயமான மாணவி அவராக எங்கும் சென்று விட்டாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்று விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×