என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விமான நிலையம் அருகே பெண் நகை பறிப்பு
ஆலந்தூர்:
ராயப்பேட்டை பீட்டர் சாலையில் குடியிருப்பவர் சுரேஷ். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி தேவி புவனேஸ்வரி. டி.ஜி.பி. அலுவலக அதிகாரி.
நேற்று சுரேஷ்-தேவி புவனேஸ்வரி இருவரும் பொழிச்சலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு இரவு வீடு திரும்பினார்கள்.
இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தேவி புவனேஸ்வரி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்தனர். திடீர் என்று தேவி புவனேஸ்வரியை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து சென்றனர்.
நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்