search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் மத்திய மந்திரி நட்டா
    X

    கஜா புயல் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் மத்திய மந்திரி நட்டா

    மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். #GajaCyclone #Nadda
    சென்னை:

    கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி ஜெ.பி.நட்டா, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர், புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். #GajaCyclone #Nadda
    Next Story
    ×