என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயல்- 3 லாரிகளில் நிவாரண பொருட்களை கொடி அசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர்
Byமாலை மலர்17 Nov 2018 4:03 PM GMT (Updated: 17 Nov 2018 4:03 PM GMT)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து 3 லாரிகளில் நிவாரண பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
சேலம்:
கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.
இந்த நிலையில், கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள், சங்கங்கள் வழியே ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இவற்றில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் விரிப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை முதல் அமைச்சர் பழனிசாமி சேலத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார். இவை உடனடியாக கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மற்றும் தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்படும்.#GajaCyclone #EdappadiPalanisamy
கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.
இந்த நிலையில், கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள், சங்கங்கள் வழியே ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இவற்றில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் விரிப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை முதல் அமைச்சர் பழனிசாமி சேலத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார். இவை உடனடியாக கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மற்றும் தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்படும்.#GajaCyclone #EdappadiPalanisamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X