search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி-கம்பத்தில் கஞ்சா விற்ற கும்பல் கைது
    X

    தேனி-கம்பத்தில் கஞ்சா விற்ற கும்பல் கைது

    தேனி மற்றும் கம்பத்தில் கஞ்சா விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கம்பம் மெட்டு 18-ம் கால்வாய் பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற சிவசாமி மற்றும் கேரளாவை சேர்ந்த சாபு ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். இதில் சாபுவை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் தேனி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் உழவர்சந்தை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற இளங்கோவன் என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×