search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்- தா.மோ. அன்பரசன் அறிவிப்பு
    X

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்- தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

    தேர்தல் குறித்து ஆலோசிக்க ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 20 ந்தேதி நடைபெற உள்ளது என்று தா.மோ. அன்பரசன் தெரிவிதுள்ளார். #dmk #thamoanbarasan

    சென்னை:

    காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்) மாலை 4 மணி அளவில் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களான மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அசன் முகமது ஜின்னா, மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.

    எனவே இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார். #dmk #thamoanbarasan

    Next Story
    ×