search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
    X

    கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    கோத்தகிரி அருகே சாலையோரம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே உள்ள ஓமக்குளி பகுதியை சேர்ந்தவர் மணி என்பவரது மகன் சிபு (வயது 27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சிபு மினி பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற சிபு இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிபார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அவர் வீட்டின் அருகே சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×