search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்
    X

    கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

    கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். #Gaja #Storm #ChennaiRain
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று சத்யகோபால் கூறினார்.



    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்புப்படை மூலம் அறிவுறுத்துவோம் என்றும், கடலோர மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அளித்துக்கொண்டே இருப்போம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். #Gaja #Storm #ChennaiRain

    Next Story
    ×