search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #Vijayabaskar #Swineflu #Dengue
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பலியாகி உள்ளனர். காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.



    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். #Vijayabaskar #Swineflu #Dengue
    Next Story
    ×