என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி ரூ.6¾ கோடி மது விற்பனை
Byமாலை மலர்8 Nov 2018 11:20 AM GMT (Updated: 8 Nov 2018 11:20 AM GMT)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
5-ந் தேதி(தீபாவளிக்கு முதல் நாள்) பீர் வகைகள் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 840-க்கும், மது வகைகள் ரூ.3 கோடியே 13 லடசத்து 52 ஆயிரத்து 70-க்கும் விற்பனை ஆகி உள்ளது.
6-ந் தேதி(தீபாவளி அன்று) பீர் வகைகள் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 700-க்கும், மது வகைகள் ரூ.2 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.72 லட்சத்து 54 ஆயிரத்து 940 அதிகம் ஆகும்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
5-ந் தேதி(தீபாவளிக்கு முதல் நாள்) பீர் வகைகள் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 840-க்கும், மது வகைகள் ரூ.3 கோடியே 13 லடசத்து 52 ஆயிரத்து 70-க்கும் விற்பனை ஆகி உள்ளது.
6-ந் தேதி(தீபாவளி அன்று) பீர் வகைகள் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 700-க்கும், மது வகைகள் ரூ.2 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.72 லட்சத்து 54 ஆயிரத்து 940 அதிகம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X