search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nagai district"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #gajacyclone
    நாகப்பட்டினம்:

    நாகை தாலுகா அலுவலக நுழைவு வாயில் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால், நாகை நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து கலந்துகொண்டு பேசினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த கால்நடைகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். புயல், கனமழையில் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், பழைய காலனி வீடுகள் உள்ளவர்களுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும். வேலை இழந்து வாழும் விவசாய தொழிலாளர்களுக்கு புயல் நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி வழங்கி ரூ.224 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவாராமன், மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #gajacyclone 
    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். #Gajastorm

    வேதாரண்யம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு ஒரு மாதமாகியும் மின் இணைப்பு பெறமுடியாமல் பல கிராமங்கள் உள்ளன. புயலில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அவைகளை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மின் மாற்றிகளும் சேதமானதால் திருவாரூர் மாவட்ட மின் மாற்றி மூலம் பிராந்தியக்கரை, மூலக்கரை ஆகிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வேதாரண்யத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேதாரண்யம் தாலுகாவில் புயலால் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 4300 பேர் ஈடுபட்டுள்ளனர். 6 மின் மாற்றிகள் நாளை முதல் செயல்பட தொடங்கும். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட மின் மாற்றியில் இருந்து மின் சாரம் பெறும் பிராந்தியக்கரை, மூலக்கரை பகுதிகளுக்கும் நாகை மாவட்ட மின் மாற்றி மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படும்.

    வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும். படகு மூலம் வண்டல், அவரிகாடு பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அங்கு பூமிக்கடியில் கேபிள் அமைத்து மின்சாரம் வழங்க மின்துறை அமைச்சர் மூலம நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உயர் அழுத்த மின் சம்பவங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். #GajaCyclone #CentralCommittee

    நாகப்பட்டினம்:

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்தியக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் வந்துள்ளனர்.

    இந்தக்குழுவில் மத்திய நிதித்துறை(செலவினங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்(ஐதராபாத்) இயக்குனர்(பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத் சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை வந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உளூர், நெய்மேலி, புலவன் காடு, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவாரூரில் இருந்து புறப்பட்ட மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை ஓட்டலில் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 8.45 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, சரோஜா, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    முதலாவதாக வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்று மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தனர். பின்னர் அங்கு இந்திராணி என்பவர் குடிசை வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து சேதமாகி உள்ளது அதனை பார்வையிட்டு அவர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டனர்.


    பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வரும் துணைமின் நிலையத்தை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கூடி நின்றவர்கள் மத்தியக் குழுவினரிடம் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் மீளமுடியாத நிலைமைக்கு நாங்கள் உள்ளோம். எங்கள் தொழில் அனைத்தும் முடங்கி உள்ளது. பல வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அரசு தான் இதை கவனத்தில் கொண்டு எங்களுக்கு கூடுதல் நிவாரணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து சென்ற குழுவினர் வேட்டைகாரனிருப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டனர். அவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா? சாப்பாடு தரமாக உள்ளதா? என்று கேட்டனர்.இதையடுத்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மத்தியக் குழுவினர் சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மரங்கள் சாய்ந்து கிடக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பெண்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு எங்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

    அதைத் தொடர்ந்து கோவில்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு சேதமாகி உள்ள செல்போன் கோபுரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் கழக சேமிப்பு கிடங்கு ஆகியவை பார்வையிட்டனர். அந்த பகுதியில் சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

    அங்கிருந்த புறப்பட்ட குழுவினர் கோடியக்கரை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டும் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது மீனவர்கள் எங்களுக்கு கூடுதல் நிவாரணம் ஒதுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த பகுதியை வந்துபார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பெரிய குத்தகை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விழுந்த மாவடி சென்ற குழுவினர் அங்கு சேதமடைந்த படகுகள், வலைகளை பார்வையிட்டனர். அப்போது கூடுதல் நிவாரணம் இருந்தால் மட்டுமே எங்கள் வாழ்க்கை தொடர முடியும். மேலும் புதிய படகுகள் அரசு வழங்க வேண்டும் என்று கூறினர். #GajaCyclone #CentralCommittee

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.

    தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.

    5-ந் தேதி(தீபாவளிக்கு முதல் நாள்) பீர் வகைகள் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 840-க்கும், மது வகைகள் ரூ.3 கோடியே 13 லடசத்து 52 ஆயிரத்து 70-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    6-ந் தேதி(தீபாவளி அன்று) பீர் வகைகள் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 700-க்கும், மது வகைகள் ரூ.2 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.72 லட்சத்து 54 ஆயிரத்து 940 அதிகம் ஆகும்.
    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் ஆகிய ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செருதூர் - வேளாங்கண்ணி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளையாற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட பாலத்தையும், தலைஞாயிறு ஒன்றியம் வண்டல் அவுரிக்காடு சாலையில் நல்லாறு, அடப்பாறு, முள்ளியாற்றில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இணைப்பு பாலம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

    மேலும், பொதுப்பணித்துறை சார்பில் அரிச்சந்திரா நதியின் குறுக்கே பிரிஞ்சிமூலை இயக்கு அணையை ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவித்திட்டம் மூலம் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புணரமைத்து மறுகட்டுமானம் செய்யும் பணிகளையும், கள்ளிமேடு கிராமத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் வெண்ணாறு உபவடிநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டுமான பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் சாலைகுகன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை செயற்்பொறியாளர்கள் வேட்டைச்செல்வம், ஞானசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார்கள் சங்கர், தையல்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந் தனர். 
    ×