search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac sale"

    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு அன்று ரூ 3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ 2.90 கோடிக்கு தான் விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ரூ 50 லட்சம் அதிகம்.
    ஈரோடு:

    பண்டிகை என்றாலே தற்போது மது அருந்திவிட்டு கொண்டாட வேண்டும் என்ற நிலையாகிவிட்டது குறிப்பாக ஒரு சிலர் இளைஞர்கள் எந்த ஒரு பண்டிகை என்றாலும் மது அருந்துவதை கெளரவமாகக் கருதுகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தீபாவளி பொங்கல் பண்டிகையையொட்டி குடிமகன்கள் மதுபானங்களை விரும்பி அருந்துவார்கள்.

    அதன்படி புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள், இளைஞர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு பிடித்தமான பீர் ரம் ஒயின் போன்றவற்றை வாங்கி அருந்தினார்.

    புத்தாண்டில் மட்டும் ரூ.3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதுகுறித்து ஈரோடு டாஸ்மாக் மேலாளர் ரங்க நாதன் கூறியதாவது:-

    இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் மது பிரியர்களுக்கு தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி அருந்தியுள்ளனர்.

    இந்த ஆண்டு ரூ 3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ 2.90 கோடிக்கு தான் விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ரூ 50 லட்சம் அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் மது விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.

    தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை ஆகி உள்ளது.

    5-ந் தேதி(தீபாவளிக்கு முதல் நாள்) பீர் வகைகள் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 840-க்கும், மது வகைகள் ரூ.3 கோடியே 13 லடசத்து 52 ஆயிரத்து 70-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    6-ந் தேதி(தீபாவளி அன்று) பீர் வகைகள் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 700-க்கும், மது வகைகள் ரூ.2 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆகி உள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.6 கோடியே 83 லட்சத்து 57 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.72 லட்சத்து 54 ஆயிரத்து 940 அதிகம் ஆகும்.
    ×