என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் டாஸ்மாக் மது பாரில் தகராறு- தொழிலாளி அடித்துக்கொலை
Byமாலை மலர்5 Nov 2018 11:09 AM GMT (Updated: 5 Nov 2018 11:09 AM GMT)
பொள்ளாச்சியில் இன்று மதியம் டாஸ்மாக் மது பாரில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி முனிசிபல் ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி மதுபாரும் உள்ளது. தீபாவளியையொட்டி இன்று 12 மணிக்கு மதுக்கடை திறக்கப்பட்டதும் கூட்டம் அதிமாக இருந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஆனந்த் என்பவரும் மது குடிக்க வந்தார். ஆனந்த் கடந்த 6 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். அதே நேரத்தில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த போஸ் என்பவர் தனது நண்பருடன் மதுக்குடிக்க வந்தார்.
போதை தலைக்கேறியதும் ஆனந்துக்கும் போசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆனந்த் போசை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது நண்பர்களை அழைத்தார். அதன்படி 6 பேர் அங்கு வந்தனர். பாருக்கு வெளியே நின்ற ஆனந்த்தை போஸ் உள்பட 8 பேர் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ஆனந்த் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு ஆன்ந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி முனிசிபல் ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி மதுபாரும் உள்ளது. தீபாவளியையொட்டி இன்று 12 மணிக்கு மதுக்கடை திறக்கப்பட்டதும் கூட்டம் அதிமாக இருந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஆனந்த் என்பவரும் மது குடிக்க வந்தார். ஆனந்த் கடந்த 6 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். அதே நேரத்தில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த போஸ் என்பவர் தனது நண்பருடன் மதுக்குடிக்க வந்தார்.
போதை தலைக்கேறியதும் ஆனந்துக்கும் போசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆனந்த் போசை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனது நண்பர்களை அழைத்தார். அதன்படி 6 பேர் அங்கு வந்தனர். பாருக்கு வெளியே நின்ற ஆனந்த்தை போஸ் உள்பட 8 பேர் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ஆனந்த் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு ஆன்ந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X