என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்1 Nov 2018 12:14 PM GMT (Updated: 1 Nov 2018 12:14 PM GMT)
நாகர்கோவிலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வல்லன் குமாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி பார்வதி(வயது72).
நேற்று பார்வதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது இளைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பார்வதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று அவரது மகளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அப்போது பார்வதியும் வீட்டிற்கு வந்தார்.
அவர் வீட்டின் உள்ளே சென்று அவர்களுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். இந்த நிலையில் அவரது இளைய மகள் கையில் கிடந்த 2 கிராம் தங்க மோதிரத்தை அவர்கள் பறித்தனர். இதனை பார்த்த பார்வதி கூச்சலிட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதனை பார்த்த அந்த 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தது, தூத்துக்குடியைச் சேர்ந்த நெல்லையப்பன் மற்றும் வட்டக்கோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், அய்யப்பன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதில் நெல்லையப்பன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அய்யப்பனை தேடி வருகிறார்கள். #tamilnews
நாகர்கோவில் வல்லன் குமாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி பார்வதி(வயது72).
நேற்று பார்வதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது இளைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பார்வதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று அவரது மகளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அப்போது பார்வதியும் வீட்டிற்கு வந்தார்.
அவர் வீட்டின் உள்ளே சென்று அவர்களுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். இந்த நிலையில் அவரது இளைய மகள் கையில் கிடந்த 2 கிராம் தங்க மோதிரத்தை அவர்கள் பறித்தனர். இதனை பார்த்த பார்வதி கூச்சலிட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதனை பார்த்த அந்த 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தது, தூத்துக்குடியைச் சேர்ந்த நெல்லையப்பன் மற்றும் வட்டக்கோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், அய்யப்பன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதில் நெல்லையப்பன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அய்யப்பனை தேடி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X