search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறில் விநாயகர் கோவிலில் உற்சவர் சிலை- கலசம் கொள்ளை
    X

    திருவையாறில் விநாயகர் கோவிலில் உற்சவர் சிலை- கலசம் கொள்ளை

    திருவையாறில் விநாயகர் கோவிலில் உற்சவர் சிலை மற்றும் கலசம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீராம் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் கோவிலில் கோபுர கலசங்களை எடுத்து தனியாக கோவிலுக்குள் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் குருக்கள் , பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் இருந்த 2½ அடி உயர வெண்கல உற்சவர் சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் இருந்த கலசமும் கொள்ளை போய் இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உற்சவர் சிலை மற்றும் கலசத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் பற்றி திருவையாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    உற்சவர் சிலை மற்றும கலசம் ஆகியவை கொள்ளை போய் இருப்பதால் சிலைகள் கடத்தல் கும்பலின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×