என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலம் அருகே தனியார் பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் படுகாயம்
Byமாலை மலர்29 Oct 2018 10:44 AM GMT (Updated: 29 Oct 2018 10:44 AM GMT)
விருத்தாசலம் அருகே தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருத்தாசலம்:
பண்ருட்டியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று இரவு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருக்கோவிலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் சென்றது. இந்த காரில் 2 பெண் உள்ளிட்ட 4 பேர் வந்தனர்.
இந்நிலையில் இந்த கார் அரசகுழி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தினால் அப்பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X