என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்27 Oct 2018 9:31 PM GMT (Updated: 27 Oct 2018 9:31 PM GMT)
திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வின்சுலாஸ். இவருடைய தம்பி அடைக்கலத்தின் மகள் மோனிஷா ஜெனிபர்(வயது 22). பி.காம் படித்துள்ள இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருடைய தந்தை அடைக்கலம், உடல் நலம் சரியில்லாமல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய், வேறு ஒருவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மோனிஷா ஜெனிபர், அவரது பெரியப்பா வின்சுலாஸ் வீட்டில் வசித்து வந்தார்.
தந்தை இறந்து விட்டதாலும், தாய் வேறு ஒருவருடன் சென்று விட்டதாலும் பாசத்துக்கு ஏங்கியபடி வாழ்ந்து வந்த மோனிஷா ஜெனிபர் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட மோனிஷா ஜெனிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வின்சுலாஸ். இவருடைய தம்பி அடைக்கலத்தின் மகள் மோனிஷா ஜெனிபர்(வயது 22). பி.காம் படித்துள்ள இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருடைய தந்தை அடைக்கலம், உடல் நலம் சரியில்லாமல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய், வேறு ஒருவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மோனிஷா ஜெனிபர், அவரது பெரியப்பா வின்சுலாஸ் வீட்டில் வசித்து வந்தார்.
தந்தை இறந்து விட்டதாலும், தாய் வேறு ஒருவருடன் சென்று விட்டதாலும் பாசத்துக்கு ஏங்கியபடி வாழ்ந்து வந்த மோனிஷா ஜெனிபர் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட மோனிஷா ஜெனிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X