search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை காளவாசலில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
    X

    மதுரை காளவாசலில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

    மதுரை காளவாசலில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள எச்.எம்.எஸ். காலனி புதுவாழ்வு நகரை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் (வயது 31). இவரது மனைவி குருதேவி. நேற்று இவர்கள் இருவரும் இரவு காட்சி சினிமாவுக்கு சென்றனர்.

    படம் முடிந்து நள்ளிரவு ஒரு மணிஅளவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சம்மட்டி புரம் தாழம்பூ தெரு ஜங்சன் பகுதியில் வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று குருதேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்து ரமேஷ் கண்ணன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×