search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்தது - 15 பெண்கள் படுகாயம்
    X

    சுங்குவார்சத்திரம் அருகே வேன் கவிழ்ந்தது - 15 பெண்கள் படுகாயம்

    சுங்குவார்சத்திரம் அருகே விபத்தில் 15 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எளிமையாள் கோட்டூர், எடையார்பாக்கம், மதுரமங்கலம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் பூந்தமல்லியில் உள்ள ககலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை 15-க்குதத் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு வேன் எளிமையாள்கோட்டூர் வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை உர வயல் வெளியில் கவிந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பெண்கள் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×