என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதிய வருமானம் கிடைக்காததால் ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் தற்கொலை
Byமாலை மலர்23 Oct 2018 10:19 PM GMT (Updated: 23 Oct 2018 10:19 PM GMT)
போதிய வருமானம் கிடைக்காததால் ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் தற்கொலை
பூந்தமல்லி:
சென்னையை அடுத்த மதுரவாயல், கங்கா நகரை சேர்ந்தவர் நாகூர் கனி(வயது 44). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி சோபிதாபேகம். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சோபிதாபேகம் தனது பிள்ளைகளுடன் சென்று விட்டார். வீட்டில் நாகூர்கனி மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து சோபிதா பேகம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் தனது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து விட்டதால் சரியான முறையில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் அவருக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நாகூர் கனி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருவதாக மதுரவாயல் போலீசார் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த மதுரவாயல், கங்கா நகரை சேர்ந்தவர் நாகூர் கனி(வயது 44). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி சோபிதாபேகம். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சோபிதாபேகம் தனது பிள்ளைகளுடன் சென்று விட்டார். வீட்டில் நாகூர்கனி மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து சோபிதா பேகம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் தனது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன நாகூர் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து விட்டதால் சரியான முறையில் வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் அவருக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நாகூர் கனி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருவதாக மதுரவாயல் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X