search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    புளியங்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

    புளியங்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள பட்டகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனகவள்ளி (வயது 24). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து கனகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதையடுத்து கண்விழித்த அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதில் செயின் 2 பகுதியாக துண்டானது. இதில் 2 பவுன் நகையுடன் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கனகவள்ளி புளியங்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் பகுதியில் இதே போன்று இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×