என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்23 Oct 2018 12:27 PM GMT (Updated: 23 Oct 2018 12:27 PM GMT)
புளியங்குடி அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள பட்டகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனகவள்ளி (வயது 24). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து கனகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதையடுத்து கண்விழித்த அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதில் செயின் 2 பகுதியாக துண்டானது. இதில் 2 பவுன் நகையுடன் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கனகவள்ளி புளியங்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் பகுதியில் இதே போன்று இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X