search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே கல்லூரி மாணவியை கேலி செய்த வாலிபர் கைது
    X

    போடி அருகே கல்லூரி மாணவியை கேலி செய்த வாலிபர் கைது

    போடி அருகே கல்லூரி மாணவியை கேலி செய்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
    தேனி:

    போடி அருகே சிலமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி மீனாட்சி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீனாட்சி தனது மகள் நந்தினியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    நந்தினி தேனியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று வரும்போது மேற்கு தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவர் கேலி, கிண்டல் செய்துள்ளார்.

    சம்பவத்தன்று நந்தினியை உரசுவது போல் சென்றுள்ளார். இதனை நந்தினியின் தாய் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×