search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி
    X

    வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி

    வெம்பாக்கம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    செய்யாறு அண்ணா நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் இளையராஜா (வயது 38). தொழிலாளி. இவருக்கு சத்யா என்ற மனைவி, 5 வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பைக்கில் செய்யாறு சென்று விட்டு இளையராஜா வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    வெம்பாக்கம் அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் வந்தபோது பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது தம்பி குலோத்துங்கன் கொடுத்த புகாரின்பேரில் தூசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×