search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது குடிக்க தாய் பணம் தராததால் கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை
    X

    மது குடிக்க தாய் பணம் தராததால் கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை

    மது குடிக்க தாய் பணம் தராததால் மனமுடைந்த பிரகாஷ் மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சுமங்கலி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் பிரகாஷ் (வயது 38). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிரகாஷ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து, தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    பிரகாஷ் மது குடிக்கும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று பிரகாஷ் தனது தாய் வசந்தியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த பிரகாஷ் திடீரென்று வீட்டில் இருந்து மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழு வதும் பரவியதால் அவர் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் பிரகாஷ் உடலில் மீது எரிந்த தீயை அணைத்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×